Thursday, January 27, 2011

வந்து வந்து போகும்

இரவும் பகலும் வந்து வந்து போகும்
மழையும் வெயிலும் வந்து வந்து போகும்
அம்மாவசையும் பௌர்ணமியும் வந்து வந்து போகும்

இன்பமும் துன்பமும் வந்து வந்து போகும்
மெய்யும் பொய்யும் வந்து வந்து போகும்
புதுமையும் பழமையும் வந்து வந்து போகும்

புகழ்ச்சியும் இகழ்ச்சியும் வந்து வந்து போகும்
வெற்றியும் தோல்வியும் வந்து வந்து போகும்
வரவும் செலவும் வந்து வந்து போகும்

இது போல் பலவும் வந்து வந்து போகும்....

உயிர் ஒன்று தான் கண்ணே வரும்.. ஆனால் போனால் வராது
ஆகையால் என் உயிரே, நீ இருக்கும் வரை
நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் ரசிப்போம்
துன்பங்களை அகற்றி இன்பங்களை பெருகுவிப்போம்....

இன்ப நேரங்களில் துன்பம் தரும்
துன்ப நேரங்களில் இன்பம் தரும்
ஒரு வரி "இத்தருணம் நிரந்தரமில்லை" என்பதுதான்....

4 comments:

  1. Last 3 lines are factual. very nice poem.

    உனக்கென ஒருவள் வந்த பின்
    கர்வம் வந்தால் என்ன சோகம் போனால் என்ன

    அவள் நினைவில் உன்னைத் துலைத்தப் பின்
    வெற்றி வந்தால் என்ன தோல்வி போனால் என்ன

    ஈருயிர் ஓருயிராய் ஆன பின்
    நேர்மை வந்தால் என்ன ஒளிவு போனால் என்ன

    இரவும் பகலும் அவள் நினைவான பின்
    சூரியன் வந்தால் என்ன நிலவு போனால் என்ன

    நினைத்தவளையே கைபிடித்த பின்
    முதுமை வந்தால் என்ன இளமை போனால் என்ன

    இனி இன்பம் இன்பம் இன்பம் மட்டும்மென்ற பின்
    வாழ்வது பூமியில் இருந்தால் என்ன நிலவில் இருந்தால் என்ன

    சுகமான வாழ்வு என்றும் நிரந்தரம்
    __________________

    ReplyDelete
  2. நல்ல அருமையான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

    ReplyDelete
  3. Which room? I mean room போட்டு யோசிச்சு எழுதிற்க. அதான் எந்த room-ன்னு கேட்டன்.

    ReplyDelete
  4. Just tried to give Feedback in poem style for a very good poem... its all IL style.

    Thanks for your appreciation.

    ReplyDelete